Tuesday, October 21, 2008

Eye queue கவிதைகள்

ஆறறிவு

பசிக்காக மனிதனை உண்ணும்
விலங்குக்கு ஐந்து அறிவு

சுவைக்க விலங்கினை உண்ணும்
மனிதனுக்கு ஆறறிவு

தண்டனை

சாராயம் விற்றவனுக்கு
ஆயுள் தண்டனை

சாராயம் குடித்தவனுக்கு
மரண தண்டனை

பிடிக்குமா?

அவளுக்கு எனவெல்லாம் பிடிக்கும்
என்று எனக்கு தெரியும்

என்னை பிடிக்குமா என்பதை தவிர!!

என் கடைசி கவலை...

எங்கள் திருமண நாள் அன்று
என் மகன் விட்டை விட்டு ஓடி சென்றான்
அவன் திருமணம் செய்துகொள்ள...

மன நாள் அன்று என் மனம் வலிக்க
உன் திருமண நாளும் இன்றே என்று என் மனம் வலிக்க..

என் தலைஎழுத்தை மாற்றும்
உன் ஒற்றை கையெழுத்து.....

இங்கே வாய்யடைத்து நாங்கள் நிற்க
அங்கே வாய் வலிக்க வாழ்த்தும் நண்பர்கள்...

அங்கே திருமண பிண்டம் ஏறிய நெய் ஊற்றினாய்
இங்கு ஊற்றாமலே நன்றாக எறிகிறது...

என் வயற்றில் பால் வார்ப்பாய் என்று நினைத்தேன்
எனகே பால் ஊற்ற நினைக்கிறாய்...

என் கடைசி கவலை...

எங்களுக்கு கொள்ளி வைக்க வருவாயா...
இல்ல ஹனிமூன் சென்று விடுவாயா?

Thursday, October 16, 2008

Software Engineer

அன்று உச்சி வெயிலில் நண்பர்களுடன் மிதிவண்டியில்
school ku செல்லும்போது இருந்த சந்தோஷம் இன்று Santro கார் இல் A.C போட்டு கொண்டு Office செல்லும்போது ஏனோ இல்லை.

அன்று ஐந்து பைசா கொடுத்து வாங்கிய மிட்டாய் சாப்பிடும்போது ஏற்பட்ட சந்தோஷம்
இன்று ஐநூறு ரூபாய் கொடுத்து Pizza,Burger சாப்பிடும்போது ஏனோ இல்லை

அன்று பதினைந்து ரூபாய் கொடுத்து Browsing center சென்று Mail check பண்ணிய போது ஏற்பட்ட சந்தோஷம்
இன்று ஐம்பதயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஏன் Laptop ல் Mail check பண்ணும் போது ஏனோ இல்லை

அன்று வானத்தில் Aeroplane போவதை பார்க்கும் போது ஏற்பட்ட சந்தோஷம் இன்று அதே Aeroplane உள்ளே ஊட்காந்து போகும் போது ஏனோ இல்லை

அன்று என் டீச்சர் Mapப் பை காட்டி இது தான் America என்ற போது ஏற்பட்ட சந்தோஷம்
இன்று America வில் இருந்து கொண்டு INDIA வை Map இல்
ஏக்கத்துடன் பார்க்கும் போது ஏனோ இல்லை

அன்று +2 படித்துக் கொண்டு இருக்கிறேன் என்ற சொன்ன போது ஏற்பட்ட சந்தோஷம் இன்று நான் ஒரு பெரிய Software Engineer சொல்லும் போது ஏனோ இல்லை .